"உங்கள் அப்பா ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி"- உதயநிதிக்கு செல்லூர் ராஜூ பதில்

"உங்கள் அப்பா ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி"- உதயநிதிக்கு செல்லூர் ராஜூ பதில்
"உங்கள் அப்பா ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி"- உதயநிதிக்கு செல்லூர் ராஜூ பதில்

"இப்போது பிரதமராக மோடி இருக்கிறார். ஏதாவது பேசி உங்கள் அப்பா ஸ்டாலின் ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி" என உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பழங்காநத்தம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ...

"எம்ஜியாரின் புகழ் பாடாத எவரும் அரசியல் செய்ய முடியாது. மதுரை மாநகராட்சியில் 100க்கு 100 வார்டுகளையும் அதிமுக கைப்பற்றி,  வரலாற்றை படைக்க உள்ளது. அகில இந்திய அளவில் அதிமுகவிற்கு இணையாக எந்தக் கட்சியும் இல்லை.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்த திமுக இதுவரை திட்டத்தை நிறைவேற்றவில்லை. சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுகிறார். அப்படியெல்லாம் சவால் விடாதீங்க தம்பி, ஏற்கெனவே இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரியாது

ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. இப்போது பிரதமராக மோடி இருக்கிறார், ஏதாவது பேசி உங்கள் அப்பா ஸ்டாலின் ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி.

திமுக அரசு வாயிலேயே அல்வா, வடை, தோசை எல்லாம் சுடுவார்கள். இது அவர்களின் பாணி. தேர்தல் தோறும் வாக்குறுதிகள் சொல்லி விட்டு எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து, மக்கள் இந்த தேர்தலில் திமுகவினருக்கு அல்வா கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com