வேளச்சேரி தொகுதியின் மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா

வேளச்சேரி தொகுதியின் மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா

வேளச்சேரி தொகுதியின் மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா
Published on

வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அண்மையில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, வேளச்சேரி தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். நேற்றையதினம் வேட்புமனு தாக்கல்செய்த இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இதனால் நேரடியாக பரப்புரையில் ஈடுபடமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

மேலும் டிஜிட்டல் முறையில் தன்னுடைய பரப்புரை இருக்குமெனவும், தன்னுடைய ஆதரவாளர்கள் மக்களை சந்திப்பார்கள் எனவும், மநீமவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com