தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்: எம்எல்ஏ பிரபு

தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்: எம்எல்ஏ பிரபு
தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்: எம்எல்ஏ பிரபு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்.களில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரனை சந்தித்து பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென இன்று சந்தித்து பேசினார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைப்பெற்றது. இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிரபு, “ மக்கள் ஆதரவு டிடிவிக்குதான் இருக்கிறது என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு காட்டுகிறது. மக்கள் என்னை நம்பி பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை. எம்எல்ஏவின் பணிகளை செய்வதற்கு கூட மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டை போடப்படுகிறது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கி தர வேண்டும் என முதல்வரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பிரச்னை என்பதும் முதல்வருக்கும் தெரியும். தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்ல வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக வர வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com