18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல்
Published on

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் சபாநாயகர் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளன.

அப்போது, சபாநாயகர் தனபால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் 500 பக்கங்களை கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தகுதி நீக்கம் ஏன் செய்தோம் என்பதை தெரிவிக்க சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றே வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சட்டவிதிகளின் படியே எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டதாக அரசு கொறடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய நீதிபதி ரவிச்சந்திர பாபு வழக்கை விசாரிக்க உள்ளதால் பெரும்பாலும் வழக்கை ஒத்திவைக்கவே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவ்வழக்குகள் கடந்த மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை இல்லை என்றும் மறு உத்தரவு வரும் வரை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். அதேபோல் வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர், பேரவைச் செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com