“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின்

“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின்
“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின்

இந்தத் தேர்தலின் வெற்றியை கலைஞர் பார்க்கமுடியவில்லை என்பதுதான் ஒரே வருத்தம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட இறுதி நிலையை அடைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை  38 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அதிமுகவும் இருக்கின்றன. 22 சட்டப்பேரவையை பொறுத்தவரை 13ல் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் இருக்கின்றன. 

2019 தேர்தலை பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரிய வெற்றியை நிலைநாட்டியுள்ள திமுக தனது கொண்டாட்டங்களை தொடர்ந்து வருகிறது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பலர் கூடி மேள தாளங்கள், பட்டாசு என வெற்றியை கொண்டாடினர்.  தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. 

இந்த வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி. களத்தில் இறங்கும் முன்பே வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டோம். அதனை தற்போது ஈட்டியிருக்கிறோம். இந்த வெற்றியை கலைஞர்  பார்க்கமுடியவில்லை என்பது தான் ஒரே வருத்தம். சட்டமன்றத்தின் சில தொகுதிகளில் இழுபறி இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க நினைத்து சதி வேலை செய்வார்கள். நாம் முறியடித்து வெற்றிபெற வேண்டும்” என தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com