பெங்களூரில் அம்பேத்கர் பெயரில் மாநாடு....: சித்தராமையாவிற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

பெங்களூரில் அம்பேத்கர் பெயரில் மாநாடு....: சித்தராமையாவிற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

பெங்களூரில் அம்பேத்கர் பெயரில் மாநாடு....: சித்தராமையாவிற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
Published on

பெங்களூருவில் அம்பேத்கர் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பெங்களூருவில் அண்ணல் அம்பேத்கர் சர்வதேச மாநாடு நடந்தது. இது குறித்து சித்தராமையாவுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும்
இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாக்க அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட முடிவுகளில் பல தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் தருணத்தில் எல்லாம் திமுக அதனை எதிர்த்துப் போராடி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை மதித்துப் போற்றும் பெங்களூரு பிரகடனங்கள் பவளவிழா கொண்டாடும் முரசொலி இதழில் வெளியிடப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com