நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

ஆண்டு தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்‌டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நீட் கொடுமையால் கடந்த ஆண்டு அனிதா உயிரை பறி கொடுத்த நாம், இந்த ஆண்டு கிருஷ்ணசாமியை பறிகொடுத்திருக்கிறோம் என கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவருக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் ‌கிருஷ்ணசாமியும் அவரது மகனும், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவராகி எத்தனையோ உயிர்களை காக்கலாம் என்ற கனவில் இருந்த மாணவருக்கு தன் தந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் வேதனையும் ஆயுளுக்கும் நீடிக்கும் என ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வி‌லிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல், மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாக‌ செயல்பட்டால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com