சி.பா.ஆதித்தனார் சிலை அகற்றம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சி.பா.ஆதித்தனார் சிலை அகற்றம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சி.பா.ஆதித்தனார் சிலை அகற்றம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சென்னை எழும்பூரில் உள்ள "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் உருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன் விழா ஆண்டில் இந்த அராஜகத்தை செய்து அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை எடப்பாடி பழனிசாமி அவமதித்துள்ளதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார். எனவே உடனடியாக திரு சி.பா. ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com