ஜெயலலிதா மரண மர்மங்களை மறைப்பது துரோகம்: ஸ்டாலின்

ஜெயலலிதா மரண மர்மங்களை மறைப்பது துரோகம்: ஸ்டாலின்

ஜெயலலிதா மரண மர்மங்களை மறைப்பது துரோகம்: ஸ்டாலின்
Published on

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மரணமடைந்தவரை உள்ள மர்மங்களை இனிமேலும் மறைப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என தெரிவித்துள்ள ஸ்டாலின், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்காமல்  ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே முட்டுக்கட்டை போடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை துவங்கினால் அப்போலோ மருத்துவமனையில் முகாமிட்டு ஜெயலலிதாவை சுற்றியிருந்தவர்களுக்கு துணைபோன பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சிக்கிக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தானே காரணம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மரணமடைந்தவரை உள்ள மர்மங்களை இனிமேலும் மறைப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று கூறியுள்ள அவர் இதற்காக தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய பன்னீர்செல்வம் இப்போது பதவி கிடைத்ததும் மவுனம் காப்பது பச்சைத் துரோகம் என்று குற்றம்சாட்டியுள்ளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com