\
பூவிருந்தவல்லி அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பூவிருந்தவல்லி அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பூவிருந்தவல்லி அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து
Published on

சென்னை பூவிருந்தவல்லி அருகே பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு சேகரிக்கும் கடையில்  தீ விபத்து ஏற்பட்டது

பூவிருந்தவல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு சேகரிக்கும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தக்கடையில் இருந்த வயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தகவல் அறிந்து பூவிருந்தவல்லி , அம்பத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. ஏன் தீ விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com