பரப்புரையின் போது அருள்வாக்கு சொல்லிய மூதாட்டி: பொன்னாடை போர்த்தி சிறப்பித்த செல்லூர் ராஜூ

பரப்புரையின் போது அருள்வாக்கு சொல்லிய மூதாட்டி: பொன்னாடை போர்த்தி சிறப்பித்த செல்லூர் ராஜூ
பரப்புரையின் போது அருள்வாக்கு சொல்லிய மூதாட்டி: பொன்னாடை போர்த்தி சிறப்பித்த செல்லூர் ராஜூ

மதுரையில் பரப்புரையின்போது அருள்வந்து ஆடி அருள்வாக்கு சொல்லிய மூதாட்டிக்கு மகிழ்ச்சியில் பொன்னாடை போர்த்தினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் கே ராஜூ விற்கு அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்தும், மேள தாளங்களோடு உற்சாகமாக வரவேற்பளித்தனர். அப்போது ஆரத்தி எடுப்பதற்காக வரிசையில் நின்று இருந்த கருப்பாயி என்ற மூதாட்டிக்கு மேள சத்தத்தால் திடீரென அருள் வந்து ஆடத் துவங்கினார். அந்த மூதாட்டியிடம் வந்த அமைச்சரிடம் வெற்றி குறித்து அருள்வாக்கு கூறினார். மகிழ்ச்சியடைந்த அமைச்சர் அந்த மூதட்டியை ஆசுவாசப்படுத்தி அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பழங்காநத்தம் பகுதியிலுள்ள மந்தை திடலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த அப்பகுதி இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்து அமைச்சர் செல்லூர் ராஜூ - விற்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com