கமல்ஹாசன் நன்றி மறந்தவர்: அமைச்சர் கடம்பூர் ராஜு

கமல்ஹாசன் நன்றி மறந்தவர்: அமைச்சர் கடம்பூர் ராஜு

கமல்ஹாசன் நன்றி மறந்தவர்: அமைச்சர் கடம்பூர் ராஜு
Published on

நடிகர் கமல்ஹாசன் நன்றி மறந்தவர் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தேர்தல் கமிஷனில் இருந்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என்றார். நடிகர் கமல்ஹாசன் பற்றி கேட்டபோது, ‘அவருக்குத் தொடந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் பொறுப்பு இல்லாமல் பேசிவருவருகிறார். அவர் நன்றி மறந்தவர். ஜெயலலிதா செய்த உதவிகளை மறந்து அவர் அதிமுகவை விமர்சித்து வருகிறார். அவரை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டியதில்லை’ என்று சொன்னார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com