‘சிங்கத்தின் குகையில் சிறுநரிகள்’: ஜெயக்குமார் தாக்கு!

‘சிங்கத்தின் குகையில் சிறுநரிகள்’: ஜெயக்குமார் தாக்கு!

‘சிங்கத்தின் குகையில் சிறுநரிகள்’: ஜெயக்குமார் தாக்கு!

சிங்கம் வாழ்ந்த குகையில் சிறுநரிகள் புகுந்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சோதனைக்கு காரணம் முதலமைச்சர் பழனிசாமி அணிதான் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சிங்கம் வாழ்ந்த குகையில் சிறுநரிகள் புகுந்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது எனக் கூறியுள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற தேசியக் கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அமைச்சர், கூட்டுறவு அமைப்புகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சிலர் அந்த இல்லத்திற்குள் சென்றதால்தான் வருமானவரிச் சோதனை நடைபெற்றதாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com