செய்தியாளர் சந்திப்பின்போது பாங்கு ஒலி.. சட்டென தொழுகையில் ஈடுபட்ட ஜெயக்குமார்..!

செய்தியாளர் சந்திப்பின்போது பாங்கு ஒலி.. சட்டென தொழுகையில் ஈடுபட்ட ஜெயக்குமார்..!
செய்தியாளர் சந்திப்பின்போது  பாங்கு ஒலி.. சட்டென தொழுகையில் ஈடுபட்ட ஜெயக்குமார்..!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது, திடீரென தொழுகையில் ஈடுபட்டார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலி கேட்டது.

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு அமைச்சர் ஜெயக்குமார் தொழுகை செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார். அத்துடன் வேளாண் மசோதா விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதே அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com