Kerala Rains | ‘அடடா மழைடா அட மழைடா...’ ஆனந்த குளியலிடும் எலிகள் கூட்டம்! #ViralVideo

கேரளாவில் பெய்த கனமழையில், ஆனந்த குளியலிடும் எலிகள் கூட்டத்தின் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அங்கே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயநாடு பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு இடையே சாலையோரம் உள்ள மரத்தடியில் எலிக் கூட்டமொன்று ஆனந்த குளியலிடும் காட்சிகளை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதில் மரத்தடியில் அமர்ந்தபடி முகத்தையும் உடலையும் தண்ணீரால் கழுவி எலிகள் ஆனந்த குளியலிடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவை, இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com