தேர்தலில் திமுக தேராது என மதுரைக்குரல் ஒலிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

தேர்தலில் திமுக தேராது என மதுரைக்குரல் ஒலிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்
தேர்தலில் திமுக தேராது என மதுரைக்குரல் ஒலிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

இனி எந்தத் தேர்தலிலும் திமுக தேராது என மதுரையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற எம்.ஜி,ஆர். நுாற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். விழாவின் போது எம்.ஜி.ஆர்., படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார். 

பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நம்மை குழியில் தள்ள நினைத்தவர்கள், இன்று அவர்களே படுகுழியில் விழுந்திருக்கிறார்கள். அது யாரென்றால் திமுக தான். உள்ளதும் போச்சே நொல்லக் கண்ணா! என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுபோல தங்களின் டெபாசிட்டையும் பறிகொடுத்துவிட்டு இன்று பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது திமுக. இனி எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக தேராது. தேரவே தேராது என்று மதுரையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com