ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் ஆலோசனை

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் ஆலோசனை

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் ஆலோசனை
Published on

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நவீன வடிவத்தில் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், விரைவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com