“நம்மை பொறுத்தவரையில் மேரி கோம் தான் வெற்றியாளர்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

“நம்மை பொறுத்தவரையில் மேரி கோம் தான் வெற்றியாளர்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
“நம்மை பொறுத்தவரையில் மேரி கோம் தான் வெற்றியாளர்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நம்மை பொறுத்தவரையில் மேரி கோம்தான் வெற்றியாளர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வியை தழுவியுள்ளார். கொலம்பிய வீராங்கனையிடம் 2 - 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மேரி கோம் தோல்வியை தழுவினார்.இந்நிலையில் புள்ளிகளை கணக்கிடுவதில் நடுவர்களின் கணக்கு மாறுபட்டிருந்தாலும் நம்மை பொறுத்தவரையில் மேரி கோம் தான் வெற்றியாளர் என தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு. 

“அன்புள்ள மேரி கோம், நீங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால் எனக்கு நீங்கள் எப்போதுமே சாம்பியன் பாக்சர் தான். இந்த உலகில் எந்தவொரு குத்துச்சண்டை வீராங்கனையும் நெருங்க முடியாத சாதனைகளை நீங்கள் படைத்துள்ளீர்கள். நீங்கள் ஜாம்பவான். இந்தியாவின் பெருமை நீங்கள். குத்துச்சண்டையும், ஒலிம்பிக்கும் உங்களை மிஸ் செய்யும்” என அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com