மாணிக் சர்க்கார் கேரளாவுக்கு போய்விடலாம்: பாஜக தலைவர் நக்கல்

மாணிக் சர்க்கார் கேரளாவுக்கு போய்விடலாம்: பாஜக தலைவர் நக்கல்
மாணிக் சர்க்கார் கேரளாவுக்கு போய்விடலாம்: பாஜக தலைவர் நக்கல்

மாணிக் சர்க்கார் கேரளா, மேற்குவங்காளம் அல்லது வங்கதேசத்துக்கு சென்றுவிடலாம் என்று திரிபுரா மாநில பாஜக தலைவர் சர்மா கூறியுள்ளார். 

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இந்தத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை பாரதிய ஜனதா வீழ்த்திவிட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திரிபுரா மாநில பாஜக தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா,  திரிபுராவை விட்டு மாணிக் சர்மா வெளியேறிவிடலாம் என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், “மாணிக் சர்க்கார் முன்பு மூன்று வழிகள் தான் உள்ளன. அவர் மேற்குவங்காளம் செல்லலாம், அங்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இன்னும் கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அப்படி இல்லையெனில், கேரளாவுக்கு செல்லலாம், அங்கு அவர்களுடைய கட்சி ஆட்சியில் உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வார்கள். அண்டை நாடான வங்கதேசத்துக்கு செல்லலாம்” என்றார்.

‘இடதுசாரிகளின் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது. இந்துத்துவா ஆட்சியை கைப்பற்றியுள்ளது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com