"நந்திகிராம் தொகுதியில் தோற்றுவிடுவோம் என மம்தா பயப்படுகிறார்"-ஜே.பி.நட்டா

"நந்திகிராம் தொகுதியில் தோற்றுவிடுவோம் என மம்தா பயப்படுகிறார்"-ஜே.பி.நட்டா
"நந்திகிராம் தொகுதியில் தோற்றுவிடுவோம் என மம்தா பயப்படுகிறார்"-ஜே.பி.நட்டா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் தோற்கப்போவதால், அவர் பயத்தில் உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்லியில் நடந்த  தேர்தல் வாக்கு சேகரிப்பு பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, "மம்தா தீதி பயப்படுகிறார், அவர் நந்திகிராமில் தோற்றுவிடுவார். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும்போது வங்கத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதைத் தொடர நாம் அனுமதிக்க வேண்டுமா? அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் ஆலயம் கட்டப்பட வேண்டுமா, வேண்டாமா? இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரியான பதிலை நாங்கள் கொடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

மேலும் அவர், “சாண்டி பாத் நிகழ்ச்சிக்காக இந்த ஆண்டு சரஸ்வதி பூஜையை டி.எம்.சி தொழிலாளர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடுவதை நான் கண்டேன். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்கள் எங்கே இருந்தார்கள்? இப்போது, மம்தா ஜி 'சாண்டி பாத்' நிகழ்ச்சியை நடத்துகிறார். நீங்கள் முன்பு ஏன் இதைச் செய்யவில்லை? அவர் இப்போது அதைச் செய்வதற்கு காரணம், அவர் தோல்வியடைவது நிச்சயம் என்று மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள், "என்று அவர் கூறினார்.

எட்டு கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள மேற்கு வங்க தேர்தலின், முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27 அன்று நடைபெற்றது, இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அடுத்த கட்டங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 1 முதல் 29 வரை நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் குறைவான செல்வாக்கைக் கொண்டிருந்த பாஜக, 2019 பொதுத் தேர்தலில் தனது இருப்பை உணர்த்தியது. அத்தேர்தலில் மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை வென்ற பின்னர் டி.எம்.சியின் முக்கிய அரசியல் போட்டியாளராக உருவெடுத்தது. அந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com