"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்

"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்துக்கொண்டே போகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்பதாகவும், திமுக 21 இடங்கள் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் அணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். மேலும், “மக்கள் மாறுதலுக்கு தயாராகிவிட்டனர். காங்கிரஸ் வந்தால் அவர்களுக்கு நல்லது. அவர்கள் வருகிறார்களா என்று அவர்களை தான் கேட்க வேண்டும். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதை இப்போது கூறமுடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com