''தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க'' - அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து

''தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க'' - அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து
''தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க'' - அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து

தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியதால் அதிமுக அதிக தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என திருமுல்லைவாயலில் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் பரப்புரையைத் துவக்கி உள்ளனர். அந்த வகையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு மீண்டும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆவடியில் உள்ள பிரசித்திபெற்ற பச்சையம்மன் ஆலயம், திருமுல்லைவாயல் சிவன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ’’தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியுள்ளதால் இதுவரை போட்டியியிட்டதைவிட அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களது வலிமை என்ன என்பதை அறிந்து நாங்கள் சீட் வழங்கினோம். அதை ஏற்காமல் வேறு பாதையை தேடி சென்றுள்ளனர்.

"எங்கிருந்தாலும் வாழ்க" என்று சொல்ல விரும்புகிறேன். அந்த கட்சி அவர்கள் பாதையில் போகட்டும்; நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம். அவர்களைவிட மிக மிக வலிமையான பாஜக, பாமக எங்களுடன் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் எங்களுடன் இருக்கும் என நம்புகிறோம். 300 கட்சிகளுக்குமேல் ஆதரவு அளித்துள்ளது. நல்ல கூட்டணி, வலிமையான கூட்டணி, மக்கள் நேசம் பெற்ற கூட்டணி’’ என அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com