மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு
மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு

மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. அன்றே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதையடுத் து திமுக- அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை தொகுதி வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். இந்நிலையில் அவர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதற்கு முன், காவல்துறையிடம் முன் அனுமதி பெறாமல், மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com