ராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி

ராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி

ராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சரான பிறகு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு தொடர்பாக மதுரை தல்லாக்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 2011-13 ஆண்டு வரையில் சுமார் ரூ7 கோடி வரையில் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்ந்ததாக மகேந்திரன் தனது மனுவில் புகார் அளித்திருந்தார். 

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் ஆகஸ்ட் 3ல் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1996ம் ஆண்டு முதல் வாங்கிய சொத்துக்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 6ம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com