விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து

விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து

விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து
Published on

தேமுதிமு பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2012-ம் செய்தியாளரை தாக்கியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை ஆஜராகுமாறு உத்தரவிட்டும் நேரில் ஆஜராகவில்லை என்று கூறி விஜயகாந்த் மற்றும் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் ஆகியோருக்கு எதிராக நேற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து, பிடிவாரண்ட்டை எதிர்த்து விஜயகாந்த் மற்றும் அனகை முருகேசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தோம். ஆனால் ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி சுல்தான் இதனை கருத்தில் கொள்ளாமல் பிடிவாரண்ட் பிறப்பித்து விட்டார். இதனால், நாளை சென்னை திரும்பும் விஜயகாந்த் விமான நிலையத்தில் கைதாக வாய்ப்புள்ளது. பிடிவாரண்ட்டை ரத்து செய்தால் அடுத்த விசாரணையில் அவர் ஆஜராவார்” என்று தெரிவித்தார். 

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரமேஷ், விஜயகாந்த் மற்றும் அனகை முருகேசன் ஆகியோர் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அடுத்த விசாரணை நடைபெறும் பிப்ரவரி 13-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com