பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி!

பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி!

பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி!
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரம் பழுதாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.  இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. 

தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப் பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனால், தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.

சென்னையில் அண்ணாநகர் மேற்கு, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், நெல்லை கோடீஸ்வரன் நகர், பூந்தமல்லியில் அறிஞர் அண்ணா வாக்குச்சாவடி மற்றும் தேனி செவத் டே பள்ளி வாக்குச்சாவடி,  செய்யாறு, ஒட்டன் சத்திரம், நாமக்கல், கோவை சிந்தாநல்லூர் பகுதி வாக்குச்சாவடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் வாக்காளர்கள் காத்தி ருக்கின்றனர். அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com