நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 5 வார்டுகளின் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

சென்னையில் வார்டு எண் 51இல், வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174, வார்டு எண் 179, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியில் வாக்குச்சாவடி எண் 5059ல் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடியில் தான் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவைதவிர்த்து, மதுரை திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17-ல் வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வார்டு எண் 16ல், வாக்குச்சாவடி எண் 16 M மற்றும் 16 W, திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25இல் வாக்குச்சாவடி எண் 57 M, 57 W ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.

இந்த 7 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com