இசைக் கலைஞர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ள உள்ளாட்சித் தேர்தல்

இசைக் கலைஞர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ள உள்ளாட்சித் தேர்தல்
இசைக் கலைஞர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ள உள்ளாட்சித் தேர்தல்

கட்சிகளின் கொள்கை விளக்க பாடல்கள் முதல் திரையிசை பாடல்கள் வரை அத்தனையும் வாசித்து வாக்காளர்களை கவரும் இசைக் கலைஞர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் அமைந்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனல் பறக்கிறது தேர்தல் பரப்புரை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு நூதன முறையில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஆடல் பாடல் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் தேர்தல் பரப்புரையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொரோனா கட்டுப்பாடுகளால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக இந்த கலைஞர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி கட்சிக் கொடிகள், மற்றும் தலைவர்களின் படங்களை விற்கும் வியாபாரிகள் மற்றும் தலைவர்களின் பாதுகாப்பிற்குச் செல்லும் காப்பாளர்களுக்கும் வருமானம் கிடைக்கும் வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் கைகொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com