சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து சிறுமி கீழே குதித்த நிலையில், படுகாயங்களுடன் உயிர் தப்பினார். சிறுமியின் பெற்றோர் பிரிந்த நிலையில், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தந்தை தரப்பில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தாயார் மறுமணம் செய்து கொண்டதால், சிறுமியை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த சிறுமி, இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.