
நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அனைவருக்கும் நன்றி.
ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம்.
- ஆர்.ஜே.டி தலைவரும், இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ்!
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 90 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 64 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 4 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 5 இடங்கள் - முன்னிலை
தொடக்க நிலவரம் - ராக்கோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை
பீகாரின் தர்பங்காவில் உள்ள ஒரு முக்கிய தொகுதியான அலிநகர், கடுமையான தேர்தல் போர்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில், நாட்டுப்புற பாடகியும் பாஜக கலாச்சார தூதருமான மைதிலி தாக்கூர் (25) தனது அரசியல் பயணத்தை இந்த தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.
மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான மைதிலி, நாட்டுப்புறப் பாடல்களால் பிரபலமானவர். 2017ஆம் ஆண்டில், இளம் பாடகி ரைசிங் ஸ்டார் என்ற பாடல் ரியாலிட்டி ஷோவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவராக முக்கியத்துவம் பெற்றார். 2021ஆம் ஆண்டு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். மைதிலியின் பிரபலத்தால் மிதிலாஞ்சல் பகுதியில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என கட்சி நம்புகிறது.
பிகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மூத்த மகனான தேஜ் பிரதாப், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். நடைபெற்றுள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலில், மஹுவா தொகுதியில் இருந்து தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டுள்ளார்.
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 131 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 88 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 5 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 6 இடங்கள் - முன்னிலை
துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
“சாம்ராட் சவுத்ரியை வெற்றி பெற செய்யுங்கள். தேர்தல் முடிந்ததும், அவரை மிகப்பெரிய ஆளாக மாற்றி உயர்ந்த இடத்தில் பிரதமர் மோடி வைப்பார்” என்று சவுத்ரிக்கு ஆதரவாக அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பேசியிருந்தார்.
வெற்றிக்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 81 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 64 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன..
வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் நடைபெற்றால் நிச்சயம் மகாகத்பந்தன் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்
- பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஸ் ராம்
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 162 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 76 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 3 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 2 இடங்கள் - முன்னிலை
தேர்தல் முடிவுகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக உள்ள நிலையில், முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பாட்னாவில் உள்ள இல்லம் முன்பு “புலிக்கு இன்னும் சக்தி இருக்கு” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 82 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 70 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 159 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 80 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 2 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 2 இடங்கள் - முன்னிலை
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணி 150 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகின்றது. இதில் பாஜக 73 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஜேடியு 69 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
கடந்த தேர்தலில் பாஜக 74 இடங்களிலும், ஜேடியு 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் சுமார் 25 இடங்களுக்கு மேல் கூடுதலாக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
"பிஹார் மாதிரியான ஒரு மாநிலத்தில் 10 ஆயிரம் என்பது மிகப்பெரிய ஒரு தொகை. அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது" - அரசியல் பார்வையாளர் இரா. முருகவேள்
காலை 10.25 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 173 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் கட்சி இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஹாரில் கடந்த சில தேர்தல்களாகவே வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த தேர்தலில்கூட ஆட்சி அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியாக அமர்ந்த மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது 12 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி வித்தியாசம் 7%-க்குக் குறைவாக இருந்த 10 தொகுதிகள் இந்த தேர்தலில் மிக முக்கியமாக கவனம் ஈர்க்கக்கூடிய தொகுதிகளாக உள்ளன.
அந்தத் தொகுதிகளில் எந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது என்பதைப் பார்க்கலாம்...
பாஜக – Parihar, Keoti, Kurhani, Bhabua ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ஆர்ஜேடி – Madhubani, Ramgarh, Pranpur ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னிலை.
ஜெடியு – Kanti தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் – Kishanganj தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதி, மாநிலத்தின் மிக முக்கியமான தொகுதியாகும். ஏனெனில், லாலு பிரசாத் யாதவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார்.
பிகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மூத்த மகனான தேஜ் பிரதாப், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். நடைபெற இருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில், மஹுவா தொகுதியில் இருந்து தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் வெற்றி நிலவரம் என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்தத் தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.
2015 இல், தேஜ் பிரதாப் யாதவ் ஆர் ஜே டி சார்பாக இத்தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ராஜ்குமார் ராய்யை 21,139 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2020 ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் மஹுவாவில் போட்டியிடாமல், சமஸ்திபூர் மாவட்டத்தின் ஹசன்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனாலும், ஆர்ஜேடி மஹுவா தொகுதியில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்திருந்தார். ஆனால், இப்போது தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டு தொகுதியில் பின்னடவைச் சந்தித்திருக்கிறார்.
லோக் ஜன்ஷக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சஞ்சய் குமார் சிங் 6,901 வாக்குகள் பெற்று மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். தேஜ் பிரதாப் யாதவ் 1,500 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். ஆர்ஜேடி வேட்பாளர் முகேஷ் குமார் ரௌஷன் 4,607 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் போட்டியிட்ட ராக்கோபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.. அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த சதிஷ்குமார் 3000 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார்..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 191 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 48 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 4 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 0
2025 பிஹார் சட்டமன்ற தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்துவருகிறது.. இண்டியா கூட்டணியில் ஆர்ஜேடி கட்சி 36 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன..
பிஹார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 187 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்..
மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் போட்டியிட்ட ராக்கோபூர் தொகுதியில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்..
6-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது பின்னடைவை சந்தித்த தேஜஸ்வி யாதவ் பாஜகவின் சதிஷ் குமாரை விட 3000 வாக்குகள் பின்தங்கியிருந்த நிலையில், மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 191 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 47 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 5 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 0
பிஹார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்திருக்கும், அரசியலில் இருந்து விலக, ராகுல் காந்திக்கு மேலும் ஒரு காரணமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என குஷ்பு கூறியுள்ளார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், பிஹார் போலவே தமிழகத்திலும் தேர்தல் முடிவுகள் இருக்கும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 198 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 39 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 6 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 0
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், முடிவுகள் முழுமையாக வரட்டும் என பதிலளித்துள்ளார்..
Bihar Assembly Elections, the people of Bihar have given a fitting response to the Congress-led INDI alliance, rejecting its falsehoods and attempts to undermine the institutions of democracy .
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 14, 2025
The mandate reaffirms the people’s trust in the alliance’s collective leadership and…
2025 பிஹார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 199 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 201 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 36 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 6 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 0
பிஹார் தேர்தலில் இண்டியா கூட்டணி தோல்வியடைந்ததற்கு SIR மூலம் நடத்தப்பட்ட தேர்தல் சதியே காரணம் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சதி, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் எடுபடாது எனவும் கூறியுள்ளார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவில் இணைந்த உடனே சீட் வாங்கிய நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் அலிநகர் தொகுதியில் கிட்டத்தட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்..
அவருக்கு எதிராக போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளார் பினோத் மிஷ்ரா பின்னடைவை சந்தித்துள்ளார்..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டுமே மாஸ்க்கை கழற்றுவேன் என கூறிய 'தி பிளூரல்ஸ் பார்ட்டி' புஷ்பம் பிரியா போட்டியிட்ட தர்பங்கா தொகுதியில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார்..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 200 இடங்கள் - முன்னிலை
இந்தியா கூட்டணி - 37 இடங்கள் - முன்னிலை
மற்றவை - 6 இடங்கள் - முன்னிலை
ஜன் சுராஜ் கட்சி - 0
பிகாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரின் மூத்த மகனான தேஜ் பிரதாப், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
நடைபெற்ற பிகார் சட்டமன்றத் தேர்தலில், மஹுவா தொகுதியில் போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ் 12000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியில் கிட்டத்தட்ட 23000 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார்.
#BREAKING | 92 இடங்களில் BJP, 26 இடங்களில் RJD முன்னிலை! #BiharElection2025 | #BiharElection | #NDA | #INDIA | #ElectionResultsWithPT pic.twitter.com/rs8vsnYicZ
— PttvOnlinenews (@PttvNewsX) November 14, 2025
பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.#Kanyakumari | #BJP | #Celebration | #BiharElection2025 | #BiharElection pic.twitter.com/SJlEbVNLCb
— PttvOnlinenews (@PttvNewsX) November 14, 2025
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு#BiharElection2025 | #BiharElection | #NDA | #INDIA | #ElectionResultsWithPT | #TejashwiYadav | #RJD pic.twitter.com/1flwa1DXtE
— PttvOnlinenews (@PttvNewsX) November 14, 2025
#BREAKING | 96 இடங்களில் BJP, 24 இடங்களில் RJD முன்னிலை!#BiharElection2025 | #BiharElection | #NDA | #INDIA | #ElectionResultsWithPT pic.twitter.com/0uc3qK5krj
— PttvOnlinenews (@PttvNewsX) November 14, 2025
#BREAKING | 27 வாக்குகளில் வெற்றி#BiharElection2025 | #BiharElection | #NDA | #INDIA | #JanSuraajParty | #ElectionResultsWithPT pic.twitter.com/bCDZDhKeLh
— PttvOnlinenews (@PttvNewsX) November 14, 2025
பீகார் தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில், மீண்டும் நிதிஷ்குமாரே முதல்வர் ஆகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் MLA ஆகாமல் MLCயை மட்டும் விரும்புவது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
2010இல் நடைபெற்ற முந்தைய பீகார் சட்டமன்றத் தேர்தலில், ‘நிதிஷ் வேண்டுமென்றே வாக்காளர்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கிறாரா’ என சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், 2012ஆம் ஆண்டு சட்ட மேலவைக்கு மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நேரடித் தேர்தல் பாதையை அல்லாமல் எம்.எல்.சி பாதையை தேர்ந்தெடுத்தது குறித்து விளக்கினார். "மேல் சபை ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் என்பதால், எந்தவொரு கட்டாயத்தினாலும் அல்ல, விருப்பப்படி எம்எல்சியாகத் தேர்வானேன்" என்று 2012 ஜனவரியில் அதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் சட்டமன்றக் குழுவின் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றும்போது நிதிஷ் குமார் கூறினார்.
பீகார் தேர்தலில் AIMIM கட்சி இஸ்லாமிய வாக்குகளைப் பிரித்து மகாகத்பந்தனுக்கு பின்னடைவு ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. சீமாஞ்சல் பகுதியில் இஸ்லாமிய வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓவைசி கட்சி இஸ்லாமிய உரிமைகளை பேசும் கட்சியாகவும், பாஜகவிற்கு ஆதரவான வாக்கு வெட்டும் கருவியாகவும் பார்க்கப்படுகிறது.
ஆர்.ஜே.டி வாக்குகளை சிதைக்கும் ஓவைசி? மொத்தமாக பறிபோகும் தொகுதிகள்; சீமாஞ்சல் சொல்லும் செய்தி! Bihar
பீகார் 2025 தேர்தலில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பாஜகவுடன் இணைந்து, 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது, 2020 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிராக், இம்முறை கூட்டணியில் இணைந்து வாக்குகளை ஒருங்கிணைத்ததின் விளைவாகும். பட்டியல் சமூக வாக்குகளை பெருமளவில் குவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை சிராக் பெற்றுத்தந்துள்ளார்.