இன்றுடன் முடிவடைகிறது வேட்பு மனுத் தாக்கல்

இன்றுடன் முடிவடைகிறது வேட்பு மனுத் தாக்கல்
இன்றுடன் முடிவடைகிறது வேட்பு மனுத் தாக்கல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ‌91 தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் ‌நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு‌ 2-ம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் ‌பதிவு நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்‌தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்றைய தினம் அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இதுவரை 608 மனுக்கள் தாக்கல் செய்யப்ப‌ட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வேட்புமனுக்கள் அளிப்பதற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 231 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், இன்னும் பலர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நாளை பரிசீ‌லனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இறுதி‌வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com