\
‘சிலர் என்னை ஒடுக்கினர்’ - காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல்

‘சிலர் என்னை ஒடுக்கினர்’ - காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல்

‘சிலர் என்னை ஒடுக்கினர்’ - காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல்
Published on

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியின் உயர்பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்தேன். காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும். ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு எனது நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com