தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! பஞ்சாப் கிங்ஸை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! பஞ்சாப் கிங்ஸை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! பஞ்சாப் கிங்ஸை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 123 ரன்களை மட்டுமே எடுத்தது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. 

அந்த அணிக்காக நித்திஷ் ராணா மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஹென்ரிக்ஸ் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் நித்திஷ் ராணா LBW முறையில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஷமி வீசிய அடுத்த ஓவரில் 9 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். 

அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் நரைன் டக் அவுட்டானார். அதனால் பவர் பிளேயில் மட்டுமே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. 

இருப்பினும் ராகுல் திரிபாட்டி மற்றும் கேப்டன் மோர்கன் இருவரும் இணைந்து 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் திரிபாட்டி 32 பந்துகளில் 41 ரன்களை குவித்து தீபக் ஹூடா பந்து வீச்சில் வெளியேறினார். அதனால் ரசல் களத்திற்கு வந்தார். 

ஆட்டத்தின் 15வது ஓவரில் ரசல் 10 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் அடித்த துல்லியமான த்ரோவினால் ரன் அவுட்டானார். அதனால் தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். ஆறு பந்துகளில் 12 ரன்கள் எடுத்து கொல்கத்தாவின் வெற்றியை அவர் உறுதி செய்தார். கேப்டன் மோர்கன் 40 பந்துகளில் 47 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகாமல் இருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கொல்கத்தா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com