கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு தடை - பழங்குடி பிரிவு மக்கள் போராட்டம்

கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு தடை - பழங்குடி பிரிவு மக்கள் போராட்டம்
கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு தடை - பழங்குடி பிரிவு மக்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொளத்துார் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்து பழங்குடி பிரிவினருக்கு இந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மாரியம்மாள் என்ற இருளர் இன பெண் தனது சமுதாய மக்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்ய சென்றார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல், இடஒதுக்கீடு பிரச்னையால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இருளர் சமுதாய மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளுங்கள் என சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இருளர் மக்கள் தேர்தலை நடத்தி வைக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com