3 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்த கொமதேக - திமுக உடன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து

3 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்த கொமதேக - திமுக உடன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து
3 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்த கொமதேக - திமுக உடன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக மூன்று இடங்களை ஒதுக்க முன்வந்த நிலையில், ஏற்கெனவே ஒரு எம்பி சீட் வைத்திருப்பதால் 4 தொகுதிகள் வேண்டும் என கொமதேக வலியுறுத்தியது. இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இரவு நடைபெறவுள்ள ஆட்சிமன்ற குழு கூட்டத்திற்குப் பிறகுதான் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று நேற்று ஈஸ்வரன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று 3 தொகுதிகளில் போட்டியிட கொமதேக ஒத்துக்கொண்டதால், அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈஸ்வரன் கூறுகையில், உதய சூரியன் சின்னத்தில் தாங்கள் போட்டியிட உள்ளதாகவும், இந்த கூட்டணி வெற்றுபெற்று ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி நாளை முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com