சிக்கன் 65 பொரித்து வாக்கு சேகரித்த கரூர் தேமுதிக வேட்பாளர்... அட என அசந்துபோன பொதுமக்கள்

சிக்கன் 65 பொரித்து வாக்கு சேகரித்த கரூர் தேமுதிக வேட்பாளர்... அட என அசந்துபோன பொதுமக்கள்
சிக்கன் 65 பொரித்து வாக்கு சேகரித்த கரூர் தேமுதிக வேட்பாளர்... அட என அசந்துபோன பொதுமக்கள்

கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பொதுமக்களுக்கு சிக்கன் 65 தயார் செய்து கொடுத்து வித்தியாசமான முறையில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

அமமுக தலைமையிலான தேமுதிக கரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுபவர் கரூர் மாவட்ட தேமுதிக பொருளாளர் கஸ்தூரி தங்கராஜ். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொறுப்பு வகித்த இவர், கரூர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கரூர் வடிவேல் நகர், ரெட்டிபாளையம், வேலுச்சாமி புரம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் கடைவீதிகளில் வியாபாரிகளை சந்தித்து பெரியவர்களின் காலில் விழுந்தும் பரப்புரை மேற்கொண்டார்.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நிறைவேற்ற வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள பிரியாணி கடை ஒன்றில் சிக்கன் 65 தயார் செய்த கொண்டிருந்த பெண்ணிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் தானே சிக்கன் 65 பொரித்தார்.

இதையடுத்து பொரித்த சிக்கன் துண்டுகளை பொதுமக்களுக்கு பரிமாறினார். அப்போது பொதுமக்களிடம் தான் ஒரு எளிமையான வேட்பாளர் என்றும், தனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் எனவும் கூறி ஆதரவு திரட்டியதைக் கண்ட பொதுமக்கள் அட..அட.. என ஆச்சரியப்பட்டு போனார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com