"அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்; சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை" - கருணாஸ்

"அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்; சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை" - கருணாஸ்
"அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்; சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை" - கருணாஸ்

சட்டப்பேரவை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சட்டப்பேரவை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை. 234 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க  பணியாற்ற வேண்டும் என்று எங்கள் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி, அங்கிருந்து விலகுவதாக அறிவித்தது. அதையடுத்து, திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கருணாஸ் கடிதம் அனுப்பினார். ஆனால், திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கொடுத்த ஆதரவை கருணாஸ் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com