பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கனிமொழி

பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கனிமொழி
பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கனிமொழி

பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும் பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். இதனைத்தொடர்ந்து மர்ம ஆசாமிகள் அந்த பகுதிக்கு வந்து பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசி விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com