காஞ்சிபுரத்தில் கூடுதலாக டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி

காஞ்சிபுரத்தில் கூடுதலாக டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி

காஞ்சிபுரத்தில் கூடுதலாக டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி
Published on

காஞ்சிபுரத்தில் நாளை முதல் கூடுதலாக 13 மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 49 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் நாளை முதல் கூடுதலாக 13 கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை முதல் காஞ்சிபுரத்தில் மொத்தம் 29 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திறக்கப்படும் மதுபான கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் கையில் குடைகளுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசங்கள் மற்றும் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com