காஞ்சிபுரம்: வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

காஞ்சிபுரம்: வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்
காஞ்சிபுரம்: வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் செய்யவுள்ள வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர். 

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய கூட்டணி வேட்பாளராக  கோபிநாத் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 இந்நிலையில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் பொதுமக்களிடையே நெசவாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட காஞ்சிபுரம் தொகுதி பிரச்சினை குறித்து பேசி வாக்குகள்  சேகரித்த  நிலையில் திடீரென காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுபடுத்தி 20 ரூபாய் உறுதிமொழி பத்திரத்தில் அனைத்தையும் எழுதி பொதுமக்கள் முன்னிலையில் அப்பகுதி மக்களை வரவழைத்து கையெழுத்திட்டார்.

மேலும் அப்பகுதி வாக்காளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் அதை அவர்களிடம் கொடுத்தார்.

இந்நிலையில் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் தன் பதவியை ராஜினாமா செய்ய இதில் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com