ஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம் ! திருவாரூரில் இன்று பொதுக் கூட்டம்

ஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம் ! திருவாரூரில் இன்று பொதுக் கூட்டம்
ஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம் ! திருவாரூரில் இன்று பொதுக் கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவாரூரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

கமல்ஹாசன் கடந்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ச்சியாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில், கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இன்று திருவாரூரில் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றி, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் கமல்ஹாசன், மாலை 3 மணியளவில் நாகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்க இருக்கிறார். திருவாரூர் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, 24ம் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com