மக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வர செயலி : கமல்ஹாசன் அறிவிப்பு

மக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வர செயலி : கமல்ஹாசன் அறிவிப்பு
மக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வர செயலி : கமல்ஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஊழலுக்கு எதிரான செயலி இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7-ம் தேதி அரசியல் வருகையை உறுதி செய்த கமல்ஹாசன், மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க 'மய்யம் விசில்' என்னும் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 'மய்யம் விசில்' என்ற அந்த செயலி வரும் ஏப்ரல் 30ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி வெளியிடப்படுவது குறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மக்கள் கைகட்டி அமைதிக் காப்பதுதான் அனைத்திற்குமான பிரச்னை என்றும், அந்த நிலை மாற பிரச்னைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் 'மய்யம் விசில்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com