அகிம்சை கற்றுக்கொடுத்தது தாய் தான்: கமல்ஹாசன் பெருமிதம்!

அகிம்சை கற்றுக்கொடுத்தது தாய் தான்: கமல்ஹாசன் பெருமிதம்!

அகிம்சை கற்றுக்கொடுத்தது தாய் தான்: கமல்ஹாசன் பெருமிதம்!
Published on

அகிம்சை என்பதை சொல்லிக்கொடுத்தது தன் தாய்தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய கமல், “நான் மய்யத்தில் இருந்து பார்த்ததால்தான் எனக்கு பல சகோதரிகள் கிடைத்துள்ளனர். நீங்கள் எப்போதும் மய்யத்திலேயே தான் இருப்பீர்களா என்று கேலி செய்கின்றனர். ஆமாம், நான் மய்யத்திலேயேதான் இருப்பேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான், நீதியும், நேர்மையும் தெரியும். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது யாரேனும் அடித்துவிட்டால் நான் ஒடி அழுதது, ஒரு பெண்ணிடம்தான். அந்தப் பெண் என் தாய். அப்போது அவர் திருப்பி அடிக்காதே என அகிம்சையைதான் சொல்லிக்கொடுத்தார். பெண்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று கேட்கிறார்கள். நான் புடவைக் கட்டியுள்ளேன். புடவைக் கட்டுவது எனக்கு நன்றாகத்தெரியும்” என்று பெருமிதமாக கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com