'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்

'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்
'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்

"தான் முதல்வரானால் லோக் ஆயுத்தா கொண்டு வருவேன்" என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது மாணவர் ஒருவர், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், தான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவிற்கு என்றும் லஞ்சம் தருவதை மக்கள் நிறுத்தினால் ஊழல் ஒழிந்து விடும் என்றும் கமல்ஹாசன் பதிலளித்தார்.  

“மக்களுக்கு இடையூன்றி நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். எங்களுடைய வியூகங்கள் சற்றே வித்தியாசமாக இருக்கும்” என போராட்டங்களை பற்றி ஏற்கனெவே கருத்து தெரிவித்த அவர், தற்போது 'லஞ்சம் தருவதை நிறுத்தினால் ஊழல் ஒழியும்' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com