கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தங்கவேல், அக்கட்சியின் தலைவர் கமல்ஹானுடன் வந்து தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் வேட்புமனு த்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், பல நற்பணிகளை செய்த தங்கவேலுவை வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளதாகவும், இவரைப் போன்ற நல்லவரின் குரல் சட்ட சபையில் ஒலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மநீம பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் காரணமா என்ற கேள்விக்கு, அரசியல் காரணமாக இருக்கலாம். அவர்கள் பதில் சொல்லட்டும் என பதிலளித்தார்.