மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பேரூர் ஆதீனம் மடத்திற்கு சென்று ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளாரை நேரில் சந்தித்து பேசினார்.
காலில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில், பிரச்சாரத்தின் போது தவறுதலாக யாரோ ஒருவர் மிதித்து இருந்ததால் கமலுக்கு காலில் வலி ஏற்பட்டிருந்தது. ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்து பேரூர் ஆதீனத்தை சந்தித்த அவர் தேர்தலில் போட்டியிடுவதால் தனக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. மடத்திற்கு வரும் நபர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கம், ஆனால் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படவில்லை.