முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களை காவல்துறை பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் எச்சரிக்கை

முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களை காவல்துறை பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் எச்சரிக்கை
முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களை காவல்துறை பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்;டம் கோவில்பட்டியில் வரும் 11ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டம் மற்றும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவிற்கான மேடை அமைக்கும் பணி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்..செ.ராஜீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்தியஅரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும், அதிமுகவும் தமிழக அரசும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றார்.

மேலும் பேசிய அவர்,  ஜல்லிக்கட்டு என்ற தமிழர் உணர்வு போராட்டத்தில் வெற்றி பெற்றது போன்று, தமிழர் உரிமை  போராட்டமான காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கும் வரை  இந்த அரசு ஓயாது என்றும், சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சி காலத்தில் தான் கெட்டு போய் இருந்தது, இந்த அரசு என்றும் காவல் துறையினரை பாதுகாக்கும் அரசாக இருந்து வருகிறது. கோவில்பட்டியில் கலந்து கொள்ள வரும் முதல்வருக்கு சிலர் கருப்புக்கொடி காட்டப்போவதாக தெரிவித்துள்ளனர். முதல்வர் கட்சி நிகழ்ச்சிக்கு வரவில்லை.. மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிக்கு தான் வருகிறார்.முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவர்களை காவல்துறை பார்த்துக்கொள்ளும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com