ஜெயலலிதா மரணம்: தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

ஜெயலலிதா மரணம்: தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
ஜெயலலிதா மரணம்: தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கவுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் வரும் 22-ஆம் தேதி வரை, தபால் மற்றும் தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக அறிவிக்கப்பட்டிருந்த 044 - 2581 3599 என்ற தொலைபேசி எண் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை பயன்படுத்தி ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். அதற்கான சட்ட உதவிக்காக வழக்கறிஞர் நிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com