ஐபிஎல் போட்டியை பார்க்கலைனா தலையா வெடிச்சிடும்?: ஜெயக்குமார் அதிரடி

ஐபிஎல் போட்டியை பார்க்கலைனா தலையா வெடிச்சிடும்?: ஜெயக்குமார் அதிரடி
ஐபிஎல் போட்டியை பார்க்கலைனா தலையா வெடிச்சிடும்?: ஜெயக்குமார் அதிரடி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவில்லை என்றால் தலையா வெடித்து விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கிரிக்கெட் விளையாட்டை பலி கொடுக்கப் பார்க்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,“ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவது மாநில அரசு அல்ல. இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஒரு நிகழ்ச்சியை நான் நடத்துகிறேன் என்றால் அது வெற்றியடைந்தா என்பதை பார்வையாளர்கள்தான் தீர்மானிக்கின்றனர். நான் இளைஞர்களிடம் பலமுறை கூறி வருகிறேன், இந்தச் சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.  நீங்கள் புறக்கணித்தால் அதைவிட நல்ல விஷயம் வேறு எதுவும் இருக்காது. இதைவிட வெளிப்படையாக எப்படி  கூற முடியும்? இதற்கு மேல் அவர்கள் போட்டியைக் காண செல்கின்றனர் என்றால் நான் என்ன செய்ய முடியும்? கிரிக்கெட் போட்டியைக் காண கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் போது அங்கே ஏன் செல்கிறீர்கள். அவ்வளவு அவசியமா அது? கிரிக்கெட் போட்டியை பார்க்கவில்லை என்றால் தலையா வெடிச்சிடும்”  எனக் கூறினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com