"சென்னையின் வெற்றியே எனக்கு முக்கியம்" - ருதுராஜ் கெய்க்வாட் !

"சென்னையின் வெற்றியே எனக்கு முக்கியம்" - ருதுராஜ் கெய்க்வாட் !
"சென்னையின் வெற்றியே எனக்கு முக்கியம்" - ருதுராஜ் கெய்க்வாட் !

சென்னை அணிக்கு வெற்றியை கொடுப்பதே எனக்கு முக்கியமானதாக தோன்றியது என்று ஆட்டநாயகன் விருது பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அணியுடனான இன்றையப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை எடுத்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. அப்போது உற்சாகமாக பேசினார் ருதுராஜ்.

அதில் "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக முக்கியமாக அணிக்கு வெற்றி தேடி தருவதே என்னுடைய எண்ணமாக இருந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அமீரகம் வந்தபோது நான் மட்டுமே கொரோனா காரணமாக அதிகமான நாள்கள் தனிமையில் இருந்தது. அது மிகவும் கடினமான நாட்கள்" என்றார் ருதுராஜ்.

மேலும் பேசிய அவர் "அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். நிச்சயம் ஏதோ ஒரு ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடுவேன் என நினைத்திருந்தேன். அது இன்று நடந்தது. பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. ஆனால் சரியான கேப்புகளில் என்னால் பவுண்டரிகளை அடிக்க முடிந்தது. அதேபோல எந்த பவுலரை விளாச வேண்டும் விளாசக் கூடாது என கவனமாக இருந்தது" என்றார் ருதுராஜ் கெய்க்வாட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com